யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாயன்மார்கட்டு பகுதியில் பெண் ஒருவரின் சடலம் மிதந்து வந்த நிலையில் இன்று (19) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சடலமாக காணப்படுபவர் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில், பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
பொலிஸார் சடலத்தை அடையாளம் காண்பது தொடர்பிலும் மரணத்திற்கான காரணம் தொடர்பாகவும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
