உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டதால் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது தமக்கு தெரியவந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (19) நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார்.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறை சட்டமூலம் மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
