வடமாகாண இலங்கை போக்குவரத்துச் சபையினர் இன்று (19) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருவதால் வடமாகாணத்தில் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை.
இந்நிலையில், யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்படுகின்றது. இதனால் அரச பணியாளர்கள், பாடாலை மாணவர்கள், பயணிகள் எனப்பலரும் பெரும் அசொரியங்களுக்கு முகம்கொடுத்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்தியத்திற்கு பொதுமுகாமையாளராக கிழக்கில் இருந்து ஒருவர் நியிமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேலும் இதுவரை காலமும் இருந்த வட பிராந்திய பொதுமுகாமையாளர் குணபாலச்செல்வம் கடந்த 31.12.2022 வரை பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில் அவரின் இடத்திற்கு எவறும் இதுவரை நியமிக்கப்படவில்லை போன்ற கோரிக்கைகளை முன்வைத்தே வடமாகாண அரச பேருந்து சாலை ஊழியர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
