தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கல் நிகழ்வு கடந்த 15 ஆம் திகதி தமிழ்மக்களால் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், பொங்கல் நிகழ்வை முன்னிட்டு மாதிரி பொங்கல் நிகழ்வுகள் முன்பள்ளிகளில் கொண்டாடப்பட்டு வருகின்றது
அவ்வகையில், ஊரெழு மேற்கு பாரதி முன்பள்ளி மாணவர்களின் பொங்கல் நிகழ்வு இன்று (20) முன்பள்ளி முன்றலில் இடம்பெற்றது.
முன்பள்ளி ஆசிரியர்களின் ஒழுங்குபடுத்தலில், முன்பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்கு பற்றுதலுடன் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.
