2022ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் 25 மாவட்டங்களுக்குமான வெட்டிப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
கொழும்பு, கம்பஹா, காலி, களுத்துறை, கண்டி, மாத்தளை, மாத்தறை, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு 144 புள்ளிகள் (தமிழ் மொழி மூலம்) வெட்டுப்புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அத்துடன், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களுக்கு 143 புள்ளிகள் (தமிழ் மொழி மூலம்) வெட்டுப்புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, புத்தளம், பொலனறுவை, பதுளை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு 142 புள்ளிகள் (தமிழ் மொழி மூலம்) வெட்டுப்புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
அநுராதபுரம், மொனறாகலை ஆகிய மாவட்டங்களுக்கு 141 புள்ளிகள் (தமிழ் மொழி மூலம்) வெட்டுப்புள்ளிகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மேலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திற்கு 140 புள்ளிகள் (தமிழ் மொழி மூலம்) வெட்டுப்புள்ளியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
