நாடாளுமன்றத்தை கைத் தொலைபேசியில் காணொளி எடுத்த இருவர் இன்று (29) மாலை நாடாளுமன்ற பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில், ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞர் என்றும் மற்றையவர் முஸ்லிம் இளைஞர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக இருவரும் தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இருவரும் நாடாளுமன்ற மைதானத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு செல்லும் வீதியின் ஊடாக தியவன்னா ஓயா பகுதிக்கு வந்து, அங்கிருந்த மரங்களுக்கு மத்தியில் இருந்து நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியை வீடியோ எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
