இலங்கையின் 75ஆவது ஆண்டு சுதந்திர தினத்தினை முன்னிட்டு இலங்கை துவிச்சக்கர வண்டி சம்மேளத்தினால் , துவிச்சக்கர வண்டி பயணம் இன்று (31) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பருத்தித்துறை முனை பகுதியில் இருந்து தெய்வேந்திர முனை பகுதி வரையில் பயணிக்கவுள்ள குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் இன்று காலை , பருத்தித்துறை சாக்கோட்டை பகுதியில் இருந்து ஆரம்பமானது.
எதிர்வரும் நான்கு நாட்களுக்கு குறித்த துவிச்சக்கர வண்டி பயணம் இடம்பெற்று தெய்வேந்திர முனை பகுதியை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
