சுதந்திர தினமான எதிர்வரும் 4 ஆம் திகதி வடக்கு – கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தாலுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.
இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பெப்ரவரி 4ம் திகதிவர்த்தக நிலையங்களை மூடி, போக்குவரத்து சேவைகளை நிறுத்தி ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இன்று (02) யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பல்கலைக்கழக மாணவர்களால் இவ் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
