ஐசிசி மகளிர் T-20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான இலங்கை மகளிர் அணி இலங்கை கிரிக்கெட் சபையினால் இன்று (02) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
8ஆவது மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் முதலாவது போட்டியில் தென் ஆபிரிக்கா அணியை எதிர்த்து இலங்கை அணி மோதவுள்ளது.
ஐசிசி இருபது T -20 மகளிர் உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணி வீரர்கள் முறையே, சமரி அத்தபத்து (தலைவி), ஓஷதி ரணசிங்க, ஹர்சிதா சமரவிக்ரம, விஷ்மி குணரட்ன, மல்ஷா செஹானி, நிலக்ஷி டி சில்வா, கவிஷா டில்ஹாரி, அமா காஞ்சனா, அச்சினி குலசூரிய, இனோக்கா ரணவீர, சுகந்திகா குமாரி, தாரிகா செவ்வந்தி, அனுஷ்கா சஞ்சீவனி, கௌஷினி நுத்யங்கனா, சத்யா சந்தீபனி ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.
