சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாவடி பகுதியில் நேற்று (05) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இன்னொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் மற்றும் ஹயஸ் வாகனத்துடன் மோதியே குறித்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது.
மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி 3 மோட்டார் சைக்கிள்கள் வேகமாக பயணித்ததாகவும் அதில் வந்த மோட்டார் சைக்கிளொன்று யாழ்ப்பாணத்திலிருத்து மருனார்மடம் நோக்கி பயணித்த ஹயஸ் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் யாழ்.ஓட்டுமடம் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய அனுஜன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஜெயசீலன் ரகுசன் என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
