முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் குற்றப்புலனாய்வு பிரிவினர் மூன்று மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மாளிகையிலிருந்து போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட பணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நேற்று (06) குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீட்டுக்கு சென்று விசாரணை நடாத்தியுள்ளனர்.
குறித்த பணம் தொடர்பில் சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
