கிளிநொச்சியில் இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் பூநகரி வீதியின் ஓசியர் கடை சந்தி பகுதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
கிளிநொச்சியிலிருந்து பூநகரி நோக்கி பயணித்த கப் ரக வாகனம் பூநகரியிலிருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த வீதியில் நெல் உலர விடுவதனால் விபத்து இடம்பெற காரணமாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்தில் 35 வயதுடைய கனகரத்தினம் ரீகன் 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
