வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு நோக்கிச் சென்ற எம்.கே.சிவாஜிலிங்கம் பயணித்த வாகனம் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர – மகிந்தபுர பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதி இன்று காலை (07) விபத்துக்குள்ளானது.
இதன்போது முச்சக்கர வண்டியை செலுத்திய ஜி.கே.எட்வின் (வயது 65) காயமடைந்துள்ள நிலையில் சேருவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மூதூர் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தற்போது திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
