இவ்வருடம் கொண்டாடப்பட்ட நாட்டின் 75 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக அரசாங்கம் அதிகளவிலான தொகையை செலவிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக 950 இலட்சம் ரூபா அல்லது 9.5 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும் இந்த வருட சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக 40 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு நாட்டில் பணவீக்கம் அதிகமாக உள்ளதால் பெரும் செலவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த வருடங்களில் சுதந்திர தின விழாக்களுக்காகச் செய்யப்பட்ட செலவுகள் வறுமாறு,
2021 இல் 80,662,000.36
2020 இல் 63,214,561.99
2019 இல் 68,130,091.15
2018 இல் 86,805,319.35
