13வது திருத்தச்சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மாகாணசபையின் ஆளுநராக பதவி வகித்துக்கொண்டு 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்தக்கூடாதென கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவிப்பது வேறு எந்த நாட்டிலும் நடைபெறாது என நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
9வது நாடாளுமன்றத்தின் 4வது கூட்டத்தொடரின் இரண்டாவது நாளான இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கொள்ளை விளக்க உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஜனாதிபதி அதிகாரங்களை நேரடியாக மாகாணசபைகளின் ஆளுநர்கள் கொண்டிருக்கும் போது அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை அமுல்படுத்தகூடாதென தெரிவிப்பது வேடிக்கையாகவுள்ளது.
13வது திருத்ததிற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் எதிர்ப்பை தெரிவிப்பது கூட பரவாயில்லை ஆனால் அவர் அதனை எதிர்த்துக்கொண்டு தொடர்ந்து எவ்வாறு ஆளுநராக உள்ளார்.
அரசியலமைப்பில் உள்ளதை அமுலாக்ககூடாது என்று தெரிவிக்கின்ற அரச அதிகாரிகள் உள்ள ஒரேஒருநாடு இலங்கை மட்டுமே” என்றார்.
