விக்கினேஸ்வரனுடன் கூட்டுச் சேர்ந்தால் பெரிதாக சாதிக்கலாம் என்ற எண்ணத்துடனே தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரிந்து சென்றனர். ஆனால் சி.வி.விக்கினேஸ்வரன் சமர்த்தியமாக பிரிந்து விட்டு ஒதுங்கி விட்டாரென இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதியின் அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கான வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நேற்று சங்கானை நிகர வைரவர் ஆலயத்தின் மண்டபத்தில் இடம்பெற்றது. அதில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“விக்கினேஸ்வரன் எங்கு சென்றாலும் சேர்வதும் பின்னர் பிரிப்பதுமே அவருடைய பாணி.
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் புரிந்துணர்வு இல்லாமல் இருந்ததாகவும் இந்த சந்தர்ப்பத்தை பாவித்து கட்சியை விட்டு அவர்கள் வெளியேறினார்கள் என்றும் இதன் உண்மை தன்மை தொடர்பில் எதுவும்
கூற முடியாத நிலையே காணப்படுகின்றது.
பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் நாடாளுமன்றத்தில் வைத்து பிரிந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தெரிவிக்கப்பட்டதாகவும் அதற்கு அவர்கள் சம்மதித்திருந்ததாக தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்திருந்ததாகவும் அதனை நம்பினோம்” என்றார்.
