மட்டக்களப்பு – லேடி மெனிங் வீதிக்கு அருகாமையில் உள்ள வாவியில் நேற்றூ (16) மாலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திருக்கோயில் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ரீ.சுதர்சன் என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர் கடந்த மூன்று தினங்களாக காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
