“நாட்டில் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதால் இலங்கை சர்வதேச சமூகத்திடம் இருந்து பெற்ற நம்பிக்கையை இழக்க நேரிடும்” என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
அவர் இன்று (20) வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்குறித்தவாறு குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைப்பது ஆபத்தான முன்னுதாரணமாக இருக்கலாம்.
அது இறுதியில் நாட்டை சர்வாதிகார ஆட்சிக்குள் தள்ளிவிடும்.
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மற்றும் வெளிநாட்டு நாடுகளின் திவால் நிலை மற்றும் உதவியால் நாட்டைப் பெரிய நெருக்கடிக்கு தள்ள வேண்டாம்.
தேசத்தின் நலனுக்காக முன்வருவது அனைத்து அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் மற்றும் மதத் தலைவர்களின் கடமை.
உள்ளூராட்சித் தேர்தல் சரியான நேரத்தில் நடைபெறுவதை உறுதி செய்யுமாறு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
