நடந்து முடிந்த உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை காலவரையின்றி ஒத்திவைக்க பரீட்சை திணைக்களம் முடிவு செய்துள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கு போதிய ஆசிரியர்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்காததே இந்த நடவடிக்கைக்குக் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை ஜீன் மாத இறுதிக்குள் வெளியிடுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் மதிப்பீட்டுப் பணி நேற்று (22) ஆரம்பமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
