உள்ளூராட்சி தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா? என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பினார்.
நாடாளுமன்றத்தில் இன்று (23) ஜனாதிபதியிடம் கேள்வி நேரத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
“எனக்கு தெரியும் உங்களுக்கு பெரிய மூளை உள்ளது என்று, ஆனால் நாட்டின் பொருளாதாரத்தை IMF இனது உதவியுடன் கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காக சாக்கு போக்கு சொல்லப்பட்டு பிற்போடப்படும் உள்ளூராட்சி தேர்தல் போல் எமது நாட்டில் ஜனாதிபதி தேர்தலோ, நாடாளுமன்ற தேர்தலோ இனிவரும் காலங்களில் நடைபெறாதா?
ஜனநாயக உரிமைகள் மறுக்கப்படுமா? இதற்கான கால அவகாசம் என்ன?” என்ற கேள்விகளை எழுப்பினார்.
