உள்ளூராட்சி சபைத் தேர்தல் அரசமைப்பு மற்றும் தேர்தல் சட்டத்துக்கு அமையவே, அறிவிக்கப்பட்டது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களினதும் இணக்கப்பாட்டுடன், தான் தேர்தல் அறிவிக்கப்பட்டது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நிதி வழங்கப்படாத பின்புலத்தில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்காகத் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (24) கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
