“கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் 2 வருடங்கள் வீட்டுக்குள் முடங்கி கிடந்தனர். கொரோனா வைரஸ் இயற்கையாக உருவானது அல்ல சில நாடுகள் மற்றும் சில மனிதர்கள் செய்த சதி” என்று வாழும் கலை அமைப்பின் தலைவரான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
“ஆனால், இவ்விடயத்தை வெளியில் கூற வேண்டாம், சர்ச்சையை ஏற்படுத்தி விடும் என்று என்னுடைய சீடர்கள் என்னை அறிவுறுத்தினர்.
கொரோனா தடுப்பூசி மருந்து எதிர்பார்த்த அளவு பலன் அளிக்கவில்லை என்று பெரிய நாடுகள் கூட தற்போது கூறுகின்றன. இது தொடர்பாக நான் முன்பு கூறியது இப்போது நிரூபணம் ஆகி உள்ளது.
கொரோனா தடுப்பு மருந்தாக மூலிகை மற்றும் ஆயுர்வேத மருந்துகளை பயன்படுத்த வேண்டும். நமது நாட்டின் யோகா மற்றும் ஆயுர்வேதம் மீது நாம் நிச்சயம் நம்பிக்கை வைக்க வேண்டும்” – என்றார்.
