• 🏠 முகப்பு
  • தமிழர் பராம்பரியங்கள்
  • இராசிபலன்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • எம்மை தொடர்பு கொள்ள
Monday, March 20, 2023
Thamil Oli
No Result
View All Result
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • யாழ்ப்பாணம்
      • மலையகம்
      • கொழும்பு
      • வடமாகாணம்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • அரசியல் செய்திகள்
  • சர்வதேசம்
  • இந்தியா
  • கட்டுரை
  • கல்வி
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • சினிமா
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • துயர் பகிர்வு
  • ஆன்மீகம்
No Result
View All Result
Thamil Oli
No Result
View All Result

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் மைத்திரியால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தொடர்பில் மைத்திரியால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நிராகரிப்பு
161
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitterwhatsapptelegram

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை அறவீட்டுத்தருமாறு, தமக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து அவற்றில் இருந்து தன்னை விடுவித்து உத்தரவிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை, மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் ரூபா 21,000 கட்டணத்துடன் தள்ளுபடி செய்ய நேற்று (01) உத்தரவிட்டது.

2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன , முன்னாள் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் உத்தரவுபிறப்பித்தது.

இந்த தாக்குதல் குறித்து புளனாய்வுப்பிரிவிக்கு முன்னரே தகவல் கிடைத்த போதிலும் தாக்குதலை தடுக்க தவறியமை தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி சிறிசேனாவை 100மில்லியன் ரூபாவை செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்தோடு இதனுடன தொடர்புபட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவையும் தாக்குதலில் பலியானவர்களுக்கு 50 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், கத்தோலிக்க மதகுருமார்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்த 12 மனுக்கள் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான 7 பேர் கொண்ட அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னரே இதுதொடர்பிலான உத்தரவு பிறப்பிக்கட்டமை குறிப்பிடத்தக்கது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களால் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நட்டஈடு தொடர்பான அனைத்து வழக்குகளிலிருந்தும் தன்னை விடுவிக்க உத்தரவிடுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதியரசர்களான சஞ்சீவ மொராயிஸ் மற்றும் பிராங்க் குணவர்தன ஆகியோரால் இவ்வாறு நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: colombo newsThamil oliThamiloli news


Previous Post

யாழ்ப்பாணத்தின் கரப்பந்தாட்ட திருவிழா இன்று ஆரம்பம்

Next Post

விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை – அமைச்சர் அறிவிப்பு

Next Post
விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை – அமைச்சர் அறிவிப்பு

விவசாயிகளுக்கு உரம் வழங்க நடவடிக்கை - அமைச்சர் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk

No Result
View All Result
  • 🏠 முகப்பு
  • செய்திகள்
    • முக்கிய செய்திகள்
    • அரசியல் செய்திகள்
    • உள்ளூர் செய்திகள்
      • கிழக்கு மாகாணம்
      • மேல் மாகாணம்
      • வடமாகாணம்
    • புலம்பெயர் தமிழர்கள் செய்திகள்
    • இந்திய செய்திகள்
    • சர்வதேச செய்திகள்
  • விளையாட்டுச்செய்திகள்
    • உள்ளூர் விளையாட்டு செய்திகள்
    • சர்வதேச விளையாட்டு செய்திகள்
  • சினிமா
  • கட்டுரை
  • கல்வி
  • தமிழர் பராம்பரியங்கள்
  • நமது கலைஞர்களின் படைப்புக்கள்
  • குறிப்புகள்
    • அழகுகலை
    • சமையல்
    • மருத்துவம்
  • நிகழ்வுகள்
  • நேர்காணல்
  • ஆன்மீகம்
    • இராசிபலன்
  • துயர் பகிர்வு
  • எம்மை தொடர்பு கொள்ள

© 2022 - 2050 All Rights Are Received by ThamilOli.com || website Desigined by ❤️ WEBbuilders.lk