மருமகனின் தாக்குதலுக்கு உள்ளான மாமியார் உயிரிழந்ததுடன், கணவனின் தாக்குதலுக்கு உள்ளாகி படுகாயமடைந்த நிலையில் மனைவி வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா பெரியஉலுக்குளம் பகுதியில் குறித்த சம்பவம் பதிவாகியுள்ளது. மருமகனின் தாக்குதலுக்குள்ளாகி மாமியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மனைவி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை கணவனிற்கும் , மனைவிக்கும் இடையில் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
அது முற்றிய நிலையில் வீட்டில் இருந்த கோடாலி மற்றும் கத்தியை கொண்டு கணவன் மனைவி மீது தாக்குதலை மேற்க்கொண்டுள்ளார்.
இதனை தடுக்க சென்ற மாமியார் மீது மருமகனால் கடுமையான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதனால் தலையில் பலத்த காயமடைந்த மனைவியின் தாயார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த மனைவி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் பெரியஉலுக்குளம் பகுதியை சேர்ந்த டிபி அமராவதி (வயது60), என்ற பெண் உயிரிழந்துள்ளதுடன், அவரது மகளான துலிகா ரத்தினசிறி (வயது37) படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொலையாளி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன்,
சம்பவம் தொடர்பாக உலுக்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்க்கொண்டு வருகின்றனர்.
