பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிளாலி பகுதியில் உள்ள குளத்தில் மூழ்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று (01) பதிவாகியுள்ளது. குளத்தில் நீராட சென்றவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கிளாலி பகுதியை சேர்ந்த 52 வயதுடைய மரியான் பீரிஸ் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
