காட்டு யானைகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
அம்பன்பொல பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் இன்று (03) அதிகாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நிகவலயாய பிரதேசத்தில் வசிக்கும் 57 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார். இதேவேளை, எஹெதுவெவ பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தாக்குதலில் உயிரிழந்தவர் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
