ஹயஸ் வாகனம் வரவேற்பு வளைவுடன் மோதியதில் நால்வர் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ஹயஸ் வாகனம் பூநகரி நல்லூர் பகுதியில் உள்ள குறித்த பிரதேசத்தை வரவேற்கும் சீமெந்தினால் கட்டப்பட்ட வளைவுடன் மோதுண்டு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
இவ் விபத்தில் வாகனத்தில் பயணித்த 4 பேர் விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
