“இந்த நாட்டிலுள்ள தாய்மார்கள் வாழ்வதை விடவும் சாவினை அதிகம் தெரிவு செய்வதற்கான களத்தினையே அரசாங்கம் தற்போது உருவாக்கியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (08) இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பெண்ணியல் வாதிகளினால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பின்னர் கிடைக்கப்பெற்ற வெற்றியே இந்த மார்ச் 08 என்ற பெண்களுக்கான தினம் ஆகும்.
நேற்று முன்னெடுக்கப்பட்டிருந்த அமைதியான போராட்டத்தின் போது கூட பொலிசார் பெண்களுக்கு எதிரான அடக்குமுறையினை கட்டவித்து விட்டிருந்தனர்.
பெண்கள் மீது கண்ணீர்புகை குண்டு தாக்குதலை நடத்துவதற்கும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொள்வதற்கும் பொலிசார் முற்பட்டிருந்தனர்.
சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பான அமைச்சர் போராட்டத்தை அடக்குவதற்கு அனைத்து வழிமுறைகளை கையாளுமாறு உத்தரவிட்டிருந்தார்.
பால்நிலை சமத்துவத்தை பாதுகாப்பதற்கான சட்டமூலம் கொண்டுவரப்படவுள்ளதாகவும் ஆனால் சட்டங்கள் அறைகளில் நடைமுறைக்கு வரமுடியாது.
பொது வெளியில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்குவதன் ஊடாகவே அது நடைமுறைக்கு வரவேண்டும்.
இவ்வாறான விடயங்கள் நகைப்புரிய விடயம் அல்ல” என்றார்.
