சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெருடாவில் பகுதியில் வீடொன்றினை உடைத்து பொருட்களை திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இணுவில் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்திருட்டுச் சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளர்களால் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதற்கமைய, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் இச்சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் இணுவில் பகுதியில் வீடொன்றில் தங்கியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
