கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி நேற்று (10) இரவு பயணித்த புகையிரத கழிவறையினுள் பச்சிளம் கைக்குழந்தை அநாதரவாக கைவிடப்பட்ட நிலையில் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த குழந்தையை யார் அங்கு கைவிட்டுச் சென்றது தொடர்பில் மேலதிக தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
அத்துடன், குறித்த குழந்தையை மீட்ட பொலிஸார் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
