ரிக்ரொக் சமூக வலைத்தளம் மூலம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 14 சிறுமியொருவர் தீராத ஆசை கொண்டு காதல் வயப்பட்ட நிலையில் காதலனை சந்திப்பதற்காக இடம் வலம் அறியாத சிறுமி திருகோணமலைக்குச் சென்று அங்கு அநாதரவாக விடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.
மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த குறித்த 14 வயதான சிறுமி ரிக்ரொக் சமூக வலைத்தளம் மூலம் ஒரு இளைஞன் மீது தீராத காதல் கொண்டு காதலனைப் பார்க்கச் சென்றுள்ளார்.
காதலன் திருகோணமலையச் சேர்ந்தவர். இந்நிலையில் சிறுமி காதலனைப் பார்ப்பதற்கு திருகோணமலைக்குச் சென்றுள்ளார்.
ஆனால், சிறுமியின் அன்புக் காதலன் காதலியான சிறுமியைப் பார்க்க வருகை தரவில்லை. இந்நிலையில் திருகோணமலை நகரில் அநாதரவாக இருந்த சிறுமியை பொலிஸார் மீட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபரான காதலனை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை மேற்க்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
