இலங்கை அரச அச்சக கூட்டுத்தாபனம் அச்சிடும் பணிகளை மேற்க்கொள்வதில் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதாக கூட்டுத்தாபனத்தின் தலைவி தெரிவித்துள்ளார்.
கூட்டுத்தாபனத்திற்கு இயந்திரங்கள், வாகன உதிரி பாகங்கள், காரியாலய உபகரணங்கள் உட்பட பல மூலப் பொருட்களை விநியோகிப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் செலுத்த வேண்டியிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த நிலுவைத் தொகைகளை இந்த வருடம் வழங்க வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆயினும், மரண மற்றும் திருமண சான்றிதழ்களை அச்சிடுவதற்கு போதிய கடதாசிகள் இருப்பதனால் அந்த ஆவணங்களில் அச்சு வேலைகள் எதுவித தடையின்றி முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
