யாழில் 14 வயதுச் சிறுமியுடன் குடும்பம் நடத்திய 20 வயதுடைய இளைஞன் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியைச் சேர்ந்த 14 வயதுடைய மாணவியுடன் குடும்பம் நடத்திய இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், சிறுமியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட இளைஞன் புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய நபர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
14 வயது சிறுமி பாடசாலைக்கு செல்ல முற்பட்ட போது குறித்த இளைஞன் அவரை அழைத்துக் கொண்டு புதுக்குடியிருப்புக்கு பகுதிக்கு சென்றுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸில் சிறுமியின் பெற்றோரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பு அதிகாரி தலைமையில் புதுக்குடியிருப்பு பகுதிக்கு சென்ற பொலிஸ் குழுவினர் சிறுமியை மீட்டதுடன், இளைஞனை கைது செய்துள்ளனர்.
அத்துடன், இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்ப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
