மண்சரிவு மற்றும் பாறை சரிவு காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி-மஹியங்கனை பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
நேற்று (19) பிற்பகல் 18 ஆவது வளைவின் இரண்டாவது வளைவு பகுதியில் மண் மற்றும் பாறைகள் சரிந்து வீழ்ந்ததால் வீதி தற்காலிகமாக மூடப்பட்டது.
வீதியில் இருந்த மண் மேடுகள் மற்றும் கற்கள் அகற்றப்பட்டு மீண்டும் குறித்த வீதி மக்கள் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.
