யாழ்.போதனா வைத்தியசாலை நோயாளர் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த இரு நோயாளிகள் மோதிக்கொண்ட நிலையில், இருவரும் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
காயங்களுடன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவர் இன்று (22) வைத்தியசாலை நோயாளர் விடுதிக்குள் தமக்குள் மோதிக்கொண்டனர்.
இந்நிலையில், இருவருக்கும் இடையிலான மோதலை வைத்திய சாலை பாதுகாப்பு பிரிவினர் தடுத்து நிறுத்தியதுடன் , பொலிஸாருக்கும் தகவல் வழங்கப்பட்டது.
