சுன்னாகத்தில் மனைவியை அநாகரிகமாக புகைப்படம் எடுத்தவர்களை தட்டிக்கேட்ட கணவன் மீது கண்மூடித்தனமான தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்டுள்ளது.
யாழில் கச்சான் வாங்க வந்த பெண் ஒருவரை வியாபரிகள் புகைபடம் எடுத்த நிலையில் அதனை தட்டிகேட்க சென்ற கணவன் மீது வியாபாரிகள் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியுள்ளனர்.
சுன்னாகம் பகுதிக்கு பெண்னொருவர் தனது கணவருடன் பொருட்கள் வாங்க சென்றுள்ளார். இதன் போது பெண் கச்சான் வாங்க சென்றபோது சில வியாபாரிகள் பெண்ணை அநாகரீகமாக புகைப்படம் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், அதனை அவதானித்த கணவர் , வியாபாரிகளுடன் கேட்டபோது கணவர் மீது அவர்கள் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியுள்ளனர்.
