கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் நேற்று இடம்பெற்ற விளையாட்டுப் போட்டி நிகழ்வில் போது நுழைந்து ரவுடிக் கும்பலால் தாக்குதல் மேற்க்கொள்ளப்பட்ட சம்பவத்தை கண்டித்து போராட்டம் ஒன்று இன்று (31) முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் இன்று காலை 8 மணியளவில் சாந்தபுரம் கலைமகள் வித்தியாலயம் முன்பாக இடம்பெற்றது. கிராம மட்ட அமைப்புக்கள், பெற்றோர் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
