அவசர பொலிஸ் பிரிவுக்கு அழைப்பை ஏற்படுத்தி மலையகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் காணாமல் போய்விட்டார் என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
பொலிஸாருக்கு போலி தகவல்களை வழங்குவதும், முறையற்ற விதத்தில் நடந்துகொள்வதும் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கின்ற நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவசர பொலிஸ் பிரிவான 119 இற்கு அழைப்பை ஏற்படுத்தியே, முட்டாள்கள் தினமான ஏப்ரல் முதலாம் திகதி இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அன்றைய தினம் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கொழும்பில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு போலியாக முறைப்பாடு செய்யப்பட்டவர் தொடர்பில் விசாரணை நடத்தியபோது, சம்பந்தப்பட்ட அரசியல் வாதிக்கு நெருக்கமானவரென தெரியவந்துள்ளது.
