நாட்டின் இலாபம் ஈட்டும் அரச நிறுவனங்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கத்திற்கு எந்த உரிமையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று (04) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“1994 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசாங்கம் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் அரசாங்கத்தின் தோட்டங்களை தனியாருக்கு வழங்குவதாக கூறியதாகவும், அந்த ஆணையின் பிரகாரம் அரச தோட்டங்களை அரசாங்கம் விற்பனை செய்ததது.
ஆனால் தற்போதைய அரசாங்கத்திற்கு அவ்வாறான ஆணை இல்லை” என்றார்.
