மட்டக்களப்பு புதிய காத்தான்குடி பகுதியில் காணாமல்போன 10 ஆம் தர பாடசாலை மாணவியை , யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த இளைஞன் ஒருவருடன் ஏறாவூர் பிரதேசத்திலுள்ள தோட்டம் ஒன்றில் வைத்து பொலிஸார் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று (11) மாலை அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவி தனது காதலன் சகிதம் இருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டுள்ளதுடன் மாணவி தற்போது மேலதிக வைத்திய பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த காதலன் காத்தான்குடியில் கைத்தொழில் நிலையமொன்றினை நடாத்திவருகின்றார்.
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடி பிரதேசத்தில் 10 ஆம் தரத்தில் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவி வீட்டில் படித்துக்கொண்டிருந்த நிலையில் திடீரென காணாமல் போயிருந்தார்.
அதேவேளை மாணவி காணாமல்போனமை தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் நேற்று முன்தினம் (10) முறைப்பாடு செய்திருந்த நிலையிலேயே பொலிஸார் அவர்களை கைது செய்தனர்.
