பாடசாலை மாணவி ஒருவர் எலிக்காய்ச்சல் காரணமாக உயிரிழந்த பரிதாபகாரமான சம்பவம் பதிவாகியுள்ளது.
தொம்பஹவெல மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவரே காய்ச்சல் காரணமாக உயிரிழந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட மாணவி மொனராகலை சிறிகல வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
