பெற்ற மகளை மூன்று வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் மேற்க்கொண்ட தந்தை ஒருவர் பொலிஸரால் இன்று (26) கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை – பொத்துவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 14 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சிறுமியின் தந்தை இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பொத்துவில் பிரதேசத்தில் பொலிஸ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றிவரும் 38 வயதுடைய சிறுமியின் தந்தையே கைது செய்யப்பட்டுள்ளார்.
14 வயது சிறுமி கடந்த 3 வருடங்களாக பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு சபையின் அவசர பிரிவான 1929 தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி குறித்த சிறுமி முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
