நீர்கொழும்பு பகுதியில் தமிழ்க் குடும்பஸ்தர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
கொழும்பு, நீர்கொழும்பை பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் சபாரத்தினம் (வயது 51) என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு 10 மணியளவில் படுகொலை செய்யப்பட்டவரின் வீட்டுக்குள் வாள்களுடன் புகுந்த இனந்தெரியாத நபர்கள் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர் என்று பொலிஸ் விசாரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
