யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டிப் பகுதியில் இடம்பெற்ற கோரவிபத்தில் இருபெண்கள் உயிரிழந்துள்ளடன், நால்வர் காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து இன்று (01) மாலை அல்லைப்பிட்டி பகுதியில் பதிவாகியுள்ளது. மோட்டார் சைக்கிளும் காரும் மோதியே குறித்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மற்றொரு பெண் உயிரிழந்துள்ளார்.
காரில் பயணித்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த பெண்கள் யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரியவருகின்றது. இவ் விபத்து தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
