நாட்டில் மனநோய்களால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சிறப்பு மனநல மருத் சங்கத்தின் தலைவரும் வைத்தியருமா டபிள்யூ.ஏ.எல். விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டி போகம்பரை பழைய சிறைச்சாலை வளாகத்தில் நடைபெற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“இலங்கையில் மனநோயாளிகள் வேகமாக அதிகரித்து வருவதற்கான காரணங்கள் குறித்து சிறப்பு ஆய்வு நடத்தினோம். தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியே இதற்கு முக்கிய காரணம் என்பது எமக்கு தெளிவாகியது.
இது மிகவும் பிரச்சனைக்குரிய நிலையாகும். ஒரு நாட்டில் முடிவெடுக்கும் நபர்கள் சரியான மன ஒருமைப்பாடு இல்லாமல் செயல்படும்போது, நாடும் மக்களும் பெரும் நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். மன நெருக்கடிகள் அதில் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.
முறையான சிகிச்சையை மேற்கொள்வதன் மூலம் குழப்பமான மனதைத் தெளிவுபடுத்தலாம். தேவையான ஆலோசனைகளை முறையாகப் பெறுவது மிகவும் முக்கியம்” – என்றார்.
