யாழ்ப்பாண சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (11) உயிரிழந்துள்ளார்.
உடுவில் பகுதியைச் சேர்ந்த 32 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
சிறுநீரக செயலிழப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே குறித்த கைதி உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
