முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுயில் சிறுமி ஒருவரை இரு இளைஞர்கள் கடத்த முயற்சித்த சம்பவம் ஒன்று இன்று (13) இடம்பெற்றுள்ளது.
கைவேலிப்பகுதியில் 10 வயதுடைய பாடசாலை சிறுமி தனியார் வகுப்பிற்கு சென்றவேளையில், மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் சிறுமியினை அழைத்து கையினை பிடித்துக்கொண்டு முகத்தினை துணியால் பொத்திப்பிடித்த போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.
இந்நிலையில், வீதியால் சென்ற மக்கள் சத்தமிட்ட போது இளைஞர்கள் தப்பி ஓடியுள்ளார்கள். சிறிது நேரத்தின் பின்னர் கண்விழித்துக்கொண்ட சிறுமியின் தகவலின் படி குறித்த பகுதியினை சேர்ந்த இளைஞனின் பெயரினை சிறுமி கூறியதற்கு இணங்க கிராம அபிவிருத்தி சங்கத்தினர் குறித்த இளைஞனை அழைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், 02 ஆம் வட்டாரம் கோம்பாவில் பகுதியினை சேர்ந்த 23 வயதுடைய இளைஞன் ஒருவர் பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கடத்தல் சம்பவம் தொடர்பில்
புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
