மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடலில் மூழ்கி காணாமல்போன மாணவன் இன்று (15) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பெரியகல்லாறு,பொற்கொல்லர் வீதியை சேர்ந்த 17 வயதுடைய பாலச்சந்திரன் ஜெசான் என்னும் மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூன்று பேர் கடலுக்கு குளிக்கச்சென்ற நிலையில் குறித்த மாணவன் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த நிலையில் தேடுதல் மேற்க்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் குறித்த மாணவனின் சடலம் இன்று காலை கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
