யாழ்ப்பாணம் – ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலை மாணவி ஒருவரை கடத்த முயற்சித்தார் என தெரிவித்து வெளியிடத்தைச் சேர்ந்த ஒருவர் குறித்த பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு தாக்கப்பட்டு யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (16) காலை இடம்பெற்றுள்ளது. வடமாகாணத்தில் சிறுவர்களை கடத்தும் முயற்சிகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று யாழ்ப்பாணத்திலும் கடத்தல் முயற்சி இடம்பெற்றுள்ளது.
இன்று காலை ஒஸ்மோனியா கல்லூரி வீதியில் பாடசாலைக்கு சென்ற மாணவி ஒருவரை நீண்ட நேரமாக ஒருவர் அவதானித்துக் கொண்டிருந்ததை அவதானித்த அப்பகுதி மக்கள் குறித்த நபரை பிடித்து விசாரித்த போது அவரது பதில் சந்தேகத்துக்கிடமாக இருந்ததினால் அவரை மடக்கி பிடித்து அவரை நன்றாக கவனித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பான துரித விசாரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.
