மூன்று மாகாணங்களுக்கான புதிய ஆளுநர்கள் இன்று (17) ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அதன்படி, வடமாகாண ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்சும், கிழக்கு மாகாண ஆளுநராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், வடமேல் மாகாண ஆளுநராக முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
